கோவில்பட்டி, பிப்.17- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோவில்பட்டி ரேவதி பிளாசாவில் சங்கமும் கடந்து வந்த பாதை யும், நாடும் நாமும் ஆகிய தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்கம் செவ்வாயன்று நடை பெற்றது. இதற்கு தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பு மாவட்டத் தலைவர் அண்ணாமலை பரமசிவம் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் சக்தி வேல், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்டச் செயலாளர் காளிராஜ் வரவேற்புரை ஆற்றினார், விருதுநகர் மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட இணைச் செயலாளர் உமாதேவி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாநில செயலாளர் வரத ராஜன் துவக்க உரையாற்றினார். சங்க மும் கடந்து வந்த பாதையும் என்ற தலைப் பில் முன்னாள் மாநில தலைவர் பழனி கருத்துரையாற்றினார். கோட்ட துணைத் தலைவர் அய்யம்மாள் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து நாடும் நாமும் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில தலை வர் மதுக்கூர் ராமலிங்கம் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பு மாவட்ட இணைச்செய லாளர் ரோமா மெர்லின் நன்றி கூறினார்.