தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் ஞாயிறன்று கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பாண்டி, முன்னாள் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, மாவட்ட செயலாளர் முத்தையா ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் மாரி நன்றி கூறினார்.