districts

img

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

குழித்துறை, ஜூன் 26- விளவங்கோடு வட்டவழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் கொண்ட குழு ஞாயிறன்று அதிகாலை குழித்துறை, மேல் புறம் அருமனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று  வந்துக் கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்து மாறு சைகை  காட்டினர். இருந்தும் அந்த கார் நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் துரத்தி  சென்று களியல் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது  தெரிய வந்தது.பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கி லும் கடத்தல் காரை வட்டாச்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைத்தனர். தப்பி ஓடிய ஓட்டுநர் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.