districts

700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் கடத்தியவர் கைது; கார் பறிமுதல்

களியக்காவிளை, ஜூன் 22- தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்தும் ரேசன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசியை ஒரு சில சமூக விரோதிகள் பொது மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி சிறிய வாகனம் முதல் பெரிய லாரிக ளில் வரை ஏற்றி குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடத்தலைத் தடுக்க தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மூல மாகவும் தனிப்படைகள் அமைத்தும் இரவு பகலாக கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடத்தல் காரர்கள் சில அதிகாரிகள் உதவி யுடன் இது போன்ற கடத்தலை தொ டர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் புதனன்று (ஜுன் 22) அதிகாலை நித்திர விளை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையில் கோனசேரி பகுதியில் ரோந்து சென்ற போது, அவர்களை கடந்து சென்ற மாருதி கார் மீது சந்தே கம் ஏற்பட்டுள்ளது. வாகனத்தை பின்தொடர்ந்து துரத்தி சென்று தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் சிறு சிறு சாக்கு மூடை களில் சுமார் 700 கிலோ ரேசன் அரிசி கறுப்பு துணி கொண்டு மூடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்தை அரிசியுடன் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில் அந்த நபர் கேரள மாநிலம் பாறசாலை பகு தியை சேர்ந்த வினு என்பதும் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ரேசன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இத னையடுத்து காருடன் பறிமுதல் செய்த அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட வினுவை வட்டவழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.