விருதுநகர், ஏப்.6- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளை ஏப்ரல் 6 வியா ழனன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணி கள் தொடங்கப்பட்டன. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள் ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை இப்பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அக ழாய்வுக்கு, ஒன்றிய, மாநில அரசுகள் அனு மதி வழங்கியுள்ளன. நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்கக் காலம் வரை யிலான சுமார் 25 ஏக்கர் பரப்புடன் காணப் பட்ட இப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பள வில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவங்கப் பட்டுள்ளன. ஏற்கனவே, நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில்,இரும்பு கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக ளவில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் நுண் கற்கால கருவிகள் மற்றும் பல வகை யான பாசிமணிகள், சூடு மண்ணாலான பொம்மைகள், தங்க ஆபரணங்கள், தக் களி, சங்க கால வளையல்கள், மோதி ரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெ டுக்கப்பட்டன. வைப்பாற்றின் கரையில் உள்ள இந்த தொல்லியல் மேட்டில் கண்டெ டுக்கப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் பானை ஓடுகள் சுமார் 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டவை என அறிய முடி கிறது.