நாகர்கோவில், ஜூன் 30- கன்னியாகுமரி மாவட்டம் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் அனைவருக் கும் வேலை நாட்கள் மற்றும் ஊதிய உயர்வு கேட்டும், இதர கோரிக்கை களை வலியுறுத்தியும் இராஜாக்கமங்க லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் ஒன்றியச் செயலாளர் கும ரேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி, மாவட் டத் தலைவர் என்.எஸ்.கண்ணன், ஒன்றி யத் தலைவர் மிக்கேல் நாயகி, ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பேசி னர். இதில் உமாபதி, ராஜேஸ்வரி, லூர்துமேரி, ஜெபமணி, ராஜூ, லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.