கடமை தவறிய தேனி ஆட்சியர்
கே.பாலபாரதி கண்டனம்
ஆர்ப்பாட்டத்தில் கே.பால பாரதி பேசுகையில், 130 கோடி மக் கள் வசிக்கும் இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர் களை ஒப்பந்த முறையில் தேர்ந் தெடுப்பதை மக்கள் எதிர்க்கின்ற னர். ராணுவ வீரர்களை வழக்க மாக தேர்ந்தெடுக்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். தமிழ கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த வொரு அரசியல் கட்சிகளும் தங் கள் இயக்கங்களை கல்லூரி களில் வளர்த்தது இல்லை.கல்விச் சாலைகளில் அரசியல் பேசக்கூடாது என்ற நடைமுறை இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலம் கொடுக்கப் படும் இந்த பயிற்சி முகாமை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இடதுசாரி கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தக் கோரி தேனி ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததால், அவர்களிடம் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் பல்கலைக் கழகங்க ளுக்குத்தான் இருக்கிறது. தமக்கு இல்லை எனக் கூறியுள் ளார் .இது ஏற்புடையதல்ல. முறைப்படி வருவாய்த்துறை யினர் மூலம் விசாரணை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல்துறையில் புகார் அளிக்க சொல்லி, கல்லூரி வளாகத்தை பூட்ட அதிகாரம் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் கடமை தவறிவிட்டார். பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த முடியாத காவல் துறையினர் போராடிய இடது சாரி அமைப்புகளின் மாணவர், இளைஞர் அமைப்பு நிர்வாகி களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்துள்ளனர். இனி வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் தொடருமா னால் இதை எப்படி முறியடிப்பது என்பது எங்களுக்கு நன்றாக தெரி யும் என்று கூறினார்.
தேனி, ஜூலை 16- அக்னிபாத், அக்னி வீர் என்ற பெயரில் தேனி அருகே தனியார் கல்வி வளாகத்தில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தடை செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி தேனி ஆட்சியர் அலுவல கம் முன்பு இடதுசாரிக் கட்சிகள் மற்றும் -ஜனநாயக அமைப்புகள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் செயல்படும் பாரதிய பண் பாட்டு சேவா கேந்திரம் என்ற அமைப்பு வீரபாண்டி சௌ ராஷ்டிரா கலை அறிவியல் கல்லூரி யில் அக்னிபாத், அக்னிவீர் திட்டத் திற்கு இலவச பயிற்சி முகாம் என்ற பெயரில் கல்லூரி வளாகத்திற்குள் பயிற்சி கொடுப்பதை தடுக்க வேண்டும். இதுபோன்ற மதவெறி நச்சு கருத்துக்களை பரப்ப கார ணமாக உள்ள கல்லூரி நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஜன நாயக அமைப்புகளின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஜூலை 16 சனிக்கிழமை யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமை வகித்தார். இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் கே.பெருமாள், எஸ்யுசிஐ கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.சி.சத்தியமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன், தமிழ்ப்புலிகள் கட்சி மாநில நிர்வாகி தலித் ராயன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற் குழு உறுப்பினரும், திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கே.பாலபாரதி கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் டி.வெங்கடேசன், சி.முரு கன், எம்.ராமச்சந்திரன், டி.கண் ணன், கே.எஸ்.ஆறுமுகம், எஸ். வெண்மணி, இ.தர்மர், சி.முனீஸ்வ ரன் மூத்த தலைவர்கள் கே.ராஜப் பன், எல்.ஆர்.சங்கரசுப்பு இடைக் கமிட்டி செயலாளர்கள், சிபிஐ மாநி லக்குழு உறுப்பினர் வே.பெத் தாட்சி ஆசாத், விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் ப.நாகரத்தி னம், நகரச் செயலாளர் அ.ஈஸ்வ ரன், சமூக நல்லிணக்க பேரவை ஒருங்கிணைப்பாளர் முகமது சபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.