districts

img

“ஆங்கிலேயருக்குத் துதிபாடிய ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை”

சிவகாசி, ஆக. 28- சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவி களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணிக்கம்தாகூர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி பற்றிப் பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எந்தத் தகுதியும் கிடையாது. காங்கிரஸ் கட்சி இந்திய விடுத லைக்காகப் போராடி உயிர்களைத் தியாகம் செய்த கட்சி. ஆங்கிலேயர்களுக்குத் துதி பாடிய  கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை  மற்றும் ஜனசங்கம் போல் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த கட்சி அல்ல. கிரிக்கெட் மட்டையைக் கூடத் தொடாத மகன்  ஜெய்ஷாவை பலகோடி ரூபாய் வரவு- செலவு நடைபெறும் கிரிக்கெட் போர்டின் தலைவராக மாற்றியுள்ளார் அமித்ஷா. ரயில்வே அமைச்சர், களநிலவரம் பற்றி  ஏதும் தெரியாதவராக இருக்கிறார். அவர் அமைச்சராக இருக்கும் ஒவ்வொரு விநாடியும் இந்தத் துறைக்கு ஆபத்து. மூன்று ரயில்கள் ஒரே  நேரத்தில் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஏரா ளமானோர் உயிரிழந்தனர். அப்போதே, எதிர்க்  கட்சிகள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்  என வலியுறுத்தின. அவர் நான்கு முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக உள்ளார். ரயில்வே துறையை அவரால் சரிவரக் கவனிக்க  முடியவில்லை. அவர் அதிகாரி போலச் செயல் படுகிறார் என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், சிவகாசி-திரு வில்லிபுத்தூர் சாலையில் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.