திண்டுக்கல், ஜூன் 24- பணியின் போது உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வேலை வழங்காமல் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இவர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்று சாலைப்பணியாளர் சங்கத்தின் திண்டுக்கல் 8 ஆவது கோட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் திண் டுக்கல் கோட்ட 8 ஆவது மாநாடு ஜூன் 23 அன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு கோட்டத்தலைவர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். கோட்டத்துணைத்தலைவர் எம்.சேகர் வரவேற்றார். மாநில துணைத்தலை வர் டி.ராஜமாணிக்கம் துவக்கவுரை யாற்றினார். மாநிலத்தலைவர் எம்.பால சுப்ரமணி, மாநில செயலாளர் சையது யூசுப் ஜான், ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விவேகானந்தன், மாவட்டச்செயலாளர் முபாரக் அலி, ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவட்டச்செயலாளர் எஸ்.எம்.ஜெய சீலன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் கோட்டச்செயலாளர் சீனி வாசன், பொருளாளர் பி.எம்.முரு கேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மாலையில் திண்டுக்கல் பிரஸ் கிளப் முன்பிருந்து பேரணியை மாநில பொருளாளர் இரா.தமிழ் துவக்கி வைத் தார். பின்னர் பொது மாநாடு நடை பெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரை யாற்றினார். அதிமுக ஆட்சிக் காலத்தில் வேலை நிறுத்தத்தின் போது சாலைப்பணியா ளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு பழி வாங்கப்பட்டனர்.அவர்களின் பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறி விப்பதாக கூறிய முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உட னடியாக வேலை வழங்க வேண்டும். தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கு உரிய ஊதிய மாற்றம் வேண்டும். ஊதியத்தில் 10 விழுக்காடு ஆபத்துப்படி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. (ந.நி.)