districts

img

எண்ணெய் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக குமரியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,  மார்ச் 26- பெட்ரோல் ,டீசல் மற்றும் எரிவாயு உருளைகளின் விலை நாளும் உயர்த்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  மார்த்தாண்டத்தில் நடந்த  ஆர்ப்பாட்டத்திற்கு நல்லூர் வட்டார செயலாளர் ஜெஸ் டின் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் கே. மாதவன், மாவட்ட குழு உறுப்பினர் எப். ஜான், முன்னாள் மார்த்தாண்டம் நகர்மன்ற உறுப்பினர் சகா தேவன், வட்டார குழு உறுப்பி னர் சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர் மற்றும் திரளான கட்சி உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.

குலசேகரம்

கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலா ளர் விஸ்வம்பரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், கட்சியின் வட்டார குழு உறுப்பினர் ஜெனித், சிஐடியு மாவட்ட துணை தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

திருவட்டார்'

திருவட்டார் வட்டா ரக்குழு சார்பில்  காங்கரை சந்திப்பில் வட்டார செயலா ளர் ஆர்.வில்சன் தலைமை யில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம். அண்ணா துரை, மாவட்டகுழு உறுப்பி னர்கள் ஆர்.ரவி, சகாய ஆன்றனி,  வட்டார குழு உறுப்பினர்கள் தங்க குமார், சோபிதராஜ், ஜோஸ் மனோகரன், கிளை செயலா ளர்கள் முருகன், ஏசுதாஸ் பெனட்ராஜ் , இ ராஜசேகர் உட்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.