districts

img

மதுரையில் ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா

மதுரை, ஆக.31-  ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கு 93 மாத அகவிலைப்படி நிலு வைகளை உடனடியாக வழங்க வேண்டும். 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஓய்வு பெற்றவர்களுக்குப் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்.  ஐந்து சதவீத கட்டுப்பாட்டை நீக்கி வாரிசு வேலையை உடனடியாக வழங்க வேண்  டும். என்பன உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்  கைகளை வலியுறுத்தி அரசுப் போக்கு வரத்துக் கழக (சிஐடியு) ஓய்வு பெற்ற தொழி லாளர்கள் நலச் சங்கம் சார்பில் மதுரையில்  தர்ணா நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை  தலைமையகம் முன்பு சங்கத் தலைவர் எஸ்.  அழகர் தலைமையில் நடைபெற்ற தர்ணா வில் பொருளாளர் எஸ்.ரவி, துணைப் பொதுச் செயலாளர் கே.நாகரத்தினம், பொதுச் செயலாளர் ஆர். வாசுதேவன், அரசு விரைவுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் ஆர்.நாகராஜன், அரசுப் போக்குவரத்து  மதுரை தொழிலாளர் (சிஐடியு)சங்கத் தலை வர் பி.எம். அழகர்சாமி, சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின், போக்குவரத்து சம்மேளன உத வித் தலைவர் வீ. பிச்சை, சிஐடியு மாவட்ட  நிர்வாகி ஜி.ராஜேந்திரன் அரசுப் போக்கு வரத்துக் கழகம் தொழிலாளர்கள் நலச் சங்க துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.  சுப்பிரமணியன் உட்பட 500-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.