districts

img

கீழப்பாவூர் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்ற தீர்மானம்

தென்காசி, ஆக. 30 தென்காசி மாவட்டம்,  கீழப்பாவூர் பேரூராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது.இந்த  கூட்டத்தில் ரூ.3  கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.  பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை வகித்தார். கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ், துணைத் தலைவர் ராஜசேகர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்  மற்றும் பேரூராட்சி அனைத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொதுசுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற  அத்தியாவசிய பணிகள்  ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வது உள்ளிட்ட   42 பொருள் குறிப்புகளும் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு உறுப்பினர்களின் முழு ஆதரவோடு  நிறைவேற்றப்பட்டது. முடிவில் பேரூராட்சி மின்பணியாளர் தனுஸ்கோடி அனைவருக்கும் நன்றி கூறினார்.