districts

img

ஒட்டன்சத்திரம்: துப்புரவுப்பணியாளர்களுக்கு கையுறை, பாதுகாப்பு உடை வழங்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம், ஆக.20-  ஒட்டன்சத்திரம் பகுதியில் கேரி பேக்கை கையுறையாக அணிந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட் டன்சத்திரம் நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்தல், தெருவில் தேங்கி யுள்ள குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் துப்புரவு பணி யாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் துப்புரவுப்பணியாளர் களுக்கு பாதுகாப்பு உடை மற்றும் கை யுறை வழங்குவதில்லை. இதனால் வேறு வழியின்றி கடைகளில் பிளாஸ்  டிக் கேரி பேக்குகளை வாங்கி அதை கையுறையாக மாட்டிக்கொண்டு துப்பு ரவுப்பணியில் ஊழியர் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு துப்புரவுப் பணியாளர்களுக்கு கையுறை மற்றும் பாதுகாப்பு உடை வழங்குவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அர சியல் கட்சியினர் மற்றும் சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.