திருவில்லிபுத்தூர், டிச.23- சமீபத்தில் பெய்த கன மழையால் திருவில்லி புத்தூர் திருமுக்குளம் கடந்த 10 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு நிரம்பியது. இந்நிலையில் குளத்தில் சில படித்துறைகளை ஒட்டி பச்சை பாசி படிந்து காணப்பட்டது. இதனால் குளத்தை உபயோகித்து வரும் பொதுமக்கள் இதை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து எக்ஸ்னோரா அமைப்பினர் குளத்தில் இறங்கி பாசிகள் மற்றும் தாவரங்களை அகற்றி, சுத்தப்படுத்தினர்.