திருச்சிராப்பள்ளி,ஜன.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 23ஆவது மாநாடு செந்தொண்டர் பேரணி யுடன் தொடங்கி எடமலைப் பட்டிபுதூர் தம்பியப்பா திரு மண மஹாலில் தோழர். கே.வரதராசன் நினை வரங்கத்தில் ஜனவரி 1, 2 -இல் நடைபெற்றது. மாநாட்டை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் தொடங்கி வைத்து பேசினார்.
தீர்மானங்கள்
மாநாட்டில், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்ட தலித் மாணவர்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். சிறு,குறு தொழில்களை புனரமைக்க வேண்டும். மாநகரில் குடி சைப் பகுதிகளில் வசிப்பவர் களுக்கு அடுக்கு மாடி குடி யிருப்புகளில் வீடு வழங்க வேண்டும். அந்தநல்லூர், மணிகண்டம் பகுதிகளில் வாழை ஆராய்ச்சி நிறு வனம் மற்றும் சிப்ஸ் தயாரிப்பு தொழிற்சலைகள் அமைக்க வேண்டும். மாநகராட்சி தூய்மைப் பணிகள் காண்டிராக்ட் விடு வதை கைவிட வேண்டும்.கோரையாறு மற்றும் உய்ய கொண்டான் கால்வாயில் வெள்ளம் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்களின் ஓய்வூதி யம் வழங்குதல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் உள்ள காலதாமதத்தை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் மென் பொருள் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கட்சியின் மாந கர் மாவட்டச் செயலாள ராக ஆர்.ராஜா தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.ஸ்ரீதர், எஸ்.ரெங்கராஜன், எஸ்.ரேணுகா, கோ.வி.வெற்றிச் செல்வன், ஜெ.ஜெயபால், பி. லெனின், வி.ராமச்சந்திரன், என்.கார்த்திகேயன் ஆகி யோர் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களை உள்ளடக் கிய 29 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பி னர் ப.செல்வசிங் நிறைவுரை யாற்றினார்.