திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் நூர்சாகிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் துறைரீதியான கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.இக்கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ,திட்ட இயக்குநர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குநர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு மகளிர் குழுக்களுக்கு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் (கிராம ஊராட்சி) சிவக்குமார் (வட்டார ஊராட்சி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.