districts

img

தேனியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4.19 கோடி நிவாரணம் வழங்கல்

தேனி,ஜன.30- தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நோய்த் தொற்றி னால் உயிரிழந்தவர்களின் குடும் பங்களின் வாரிசுதாரர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கொரோனா நோய்த் தொற்றி னால் உயிரிழந்தவர்களின் குடும் பங்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு நிவா ரண உதவித்தொகை ரூ.50 ஆயி ரம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர்-2021 முதல்  தற் போது வரை தேனி வட்டத்திற்கு உட்பட்ட 143 பயனாளிகளுக்கு  ரூ.71.50 இலட்சம் மதிப்பீட்டிலும், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட 141 பயனாளிகளுக்கு ரூ.70.50 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டி பட்டி வட்டத்திற்குட்பட்ட 140 பய னாளிகளுக்கு ரூ.70  லட்சம் மதிப் பீட்டிலும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட 292 ரூ.146 லட்சம் மதிப்பீட்டிலும், போடி நாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட 122 பயனாளிகளுக்கு ரூ.61  லட் சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 838 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி வட்டம், டி. பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மனைவி நித்தியதாமரை தெரி விக்கையில், கொரோனா நோய்த் தொற்றினால் எனது கணவர் பாதிக்கப்பட்டு, கடந்த 13.06.2021 அன்று உயிரிழந்தார். இதனால், போதிய வருமானமின்றி எனது  வாழ்வு மற்றும் எனது குழந்தை களின் எதிர்காலம் என்னவாகும் என்ன செய்வது என அறியாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலை யில் வாழ்ந்து வந்தேன். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச் சர் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர் களின் குடும்பங்களின் வாரிசு தாரர்களுக்கு நிவாரணத் உத வித்தொகை ரூ.50 ஆயிரம் கிடைக்கப் பெற்றது. இதனால், தற்போது யாருடைய தயவு மின்றி நான் ஏதேனும் ஒரு சிறு தொழில் தொடங்கி, எனது குழந் தைகளின் எதிர்கால வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாத்து வருகின்ற  தமிழ்நாடு முதலமைச்சருக்கு  வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்ட வர்களாக இருப்போம் என தெரி வித்தார். இத்தகவலை   தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் இரா.சண்முகசுந்தரம்,   உதவி மக்கள் தொடர்பு அலு வலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.