பதேஹாபாத், (ஹரியானா), ஜன.9- ஹரியானா மாநி லம் தோஹானா மாவட் டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்த வர் அமர்புரி என்ற ஜிலேபி சாமியார். இவ ரிடமிருந்து ஹரியானா காவல்துறை 2018-ஆம் ஆண்டு ஃபதே ஹாபாத் மாவட்டத்தின் தோஹானா நக ரத்திலிருந்து ‘ஜிலேபி (சாமியார்) பாபா’ என்று அழைக்கப்படும் அமர்புரியின் கைப்பேசியிலிருந்து 120 பாலியல் காணொளி கிளிப்பிங்குகளைக் கைப்பற்றி அவரைக் கைது செய்தது. இதை அப்போதைய ஃபதேஹாபாத் மகளிர் காவல் ஆய்வாளர் பிம்லா தேவி உறுதிப்படுத்தினார். பல பெண்கள் பேய் பிடித்திருப்ப தாகக் கூறி பேயை விரட்டுமாறு சாமியாரி டம் வந்துள்ளனர். அவர் பாதிக்கப்பட்ட வர்களுக்குச் சில திரவங்களில் மருந்து களைக் கலந்து வழங்கியுள்ளார். பின்னர் அவர்களைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிர யோகம் செய்துள்ளார். இந்த வழக்கு * பதேஹாபாத் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜிலேபி சாமியார் குற்றவாளி என அறிவித்துள்ளது. இவர் சாமியாராக மாறுவதற்கு முன் தெருவில் ஜிலேபி விற்றுக்கொண்டிருந் தார். அதனால் அவர் ஜிலேபி சாமியார் ஆகி விட்டார்.