districts

img

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி ஏப்.26 இல் போராட்டம்

இராஜபாளையம், ஏப்.6-  மதுரை மாவட்டம் திருமங்க லம் அருகில் விதிமுறைகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இராஜபாளையம் நகரில் வாகன உரிமையாளர், ஓட்டுநர் சாலை  போக்குவரத்துத் தொழிலா ளர்களின் ஒருங்கிணைப்புக்குழு வின் சார்பில் ஆலோசனைக் கூட் டம் நடைபெற்றது.  கப்பலூர் சுங்கச்சாவடியா னது விதிகளை மீறி அமைக்கப்பட் டுள்ளதால் அதை அகற்ற வேண் டும் என ஏப்ரல்  26-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அரவிந் தன், எஸ்.பாலு, மதுரை புறநகர் மாவட்டம் எம்.திருமலை, கே. கண்ணன், எஸ்.தங்கவேல், ஜே. விஜயகுமார் மற்றும் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட வாடகை கார், வேன், பஸ், லாரி, மினிவேன் அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.