districts

img

தாமரைக்குளத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிடுக!

விருதுநகர், ஜூலை 11- நிலத்தடி நீரை பாழ்படுத்தி, விளை நிலங்களை சீரழிக்கும் வகை யில் விருதுநகர் மாவட்டம், காரி யாபட்டி அருகே தாமரைக்குளத் தில் கொண்டுவரப்படும் ஜவுளிப் பூங்கா திட்டத்தை தமிழக அரசு உட னடியாக ரத்து செய்ய வேண்டு மென மாவட்ட ஆட்சியரிடம் கிராம  மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். காரியாபட்டி அருகே உள்ளது தாமரைக்குளம் கிராமம். இங்கு கடந்த 2016 ம் ஆண்டு ஜவுளிக்  பூங்கா கொண்டுவரப்படும் என அர சால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்  தில், ஜவளிப் பூங்கா என்ற பெய ரில் சாயப்பட்டறைகள் அமைய உள்ளதாகவும், அவ்வாறு அமைந்  தால், சாயக் கழிவுகள் நிலத்தடி  நீரில் புகுந்து விடும். மேலும் அப் பகுதியில் உள்ள கண்மாய்கள் மாசுபடுவதோடு விவசாய நிலங்  கள் பாதிக்கப்படும் என அப்பகுதி யினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை யடுத்து, அத்திட்டம் அமல்படுத்தப் படவில்லை. இந்நிலையில், பாஜக வின்  விருதுநகர் மாவட்ட பொறுப்பாள ராக உள்ள பேராசிரியர் சீனி வாசன், பத்திரிகையாளர்கள் சந்  திப்பில், தாமரைக்குளத்தில் ஜவு ளிப் பூங்கா அமைக்க கோரி அக் கட்சியின் சார்பில் நடை பயணம் நடத்தப்படும் என அறிவித்தார். இதனால், ஆவேசமடைந்த அப்  பகுதியைச் நேர்ந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், தாமரைக்குளத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கக் கூடாது. மேலும், பாஜகவினர் நடைபயணம் செல்வ தையும் தடுத்து நிறுத்த வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்  பதாக உறுதியளித்தார். இதுகுறித்து விவசாயிகள் கூறி யதாவது: காரியாபட்டி வட்டத்திற்கு உட்பட்டது தாமரைக்குளம், செந்  நெல்குடி, இசலிமடை, காரை குளம், செட்டிகுளம் உள்ளிட்ட கிரா மங்கள் உள்ளன. இங்கு விவசா யத்தை நம்பியே பெரும்பாலா னோர் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், தாமரைக்குளத் தில் ஜவுளிப் பூங்கா என்ற பெய ரில் சாயப்பட்டறை அமைந்தால், நீர் வரத்து ஓடை வழியாக சாயக் கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள கண்மாய்களுக்குள் சென்று  விடும். மேலும், நிலத்தடி நீர் பாதிக்  கப்படும். ஆடு, மாடுகள் குடிப்ப தற்கு நல்ல தண்ணீர் இன்றி மாண்டு போகும் நிலை ஏற்படும். மேலும்  விவசாயம் முற்றிலும் பாதிக்கப் படும் அபாயமும் உள்ளது. எனவே, இங்கு ஜவுளிப் பூங்கா அமைப் பதை தமிழக அரசு கை விட வேண் டும் என கோரிக்கை விடுத்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியரி டம், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட செயலாளர் வி. முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், காரியாபட்டி வட்ட செயலாளர் வி. முருகன் உள்ளிட்டோர் நேரில் மனு அளித்தனர்.