மதுரை, மே 20- மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து மதுரை கிழக்கு ஊராட்சி ஒன் றியப் பகுதிகளில் நடைபெறுகின்ற திட்டப் பணிகளை மே 19 வெள்ளி யன்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆய்வு மேற்கொண் டார். கருப்பாயூரணி ஊராட்சி ஒன்றிய அப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற திட்ட ஆய்வு தொடக்க நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி.,பேசுகையில், கிழக்கு தொகு திக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் சிறப் பாக செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இன்னும் கூடுதலாக பணி களை சிறப்பாக செய்வதற்காகத் தான் இதுபோன்ற ஆய்வுகள் நடத் தப்படுகின்றன. அடுத்த நான்கு நாட் கள் கிழக்கு ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த ஆய்வுப் பணிகள் நடைபெறும் அதில் அனைத்து அதிகாரிகளும் வந்து, முறையாக வருகிற மனுக்களை குறிப்பு எடுத்துக் கொண்டு அதன் மீது முறையான நடவடிக்கை மேற் கொண்டு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து கருப்பாயூரணி அப்பர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சத்துணவு மையம் பணிகள், சக்கிமங்கலம், காடச்சேரி, இள மனூர், ஆண்டார் கொட்டாரம், கருப் பப் பிள்ளையேந்தல், சக்குடி, அங்காடிமங்கலம், களிமங்கலம், குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை மற்றும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். குன்னத்தூர் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் சமுதாயக்கூடப் பணி களை ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் கலந்துரை யாடினார். கருப்பாயூரணி பகுதியில் பெண் ஒருவர் 100 நாள் வேலை கேட்டு முறையிட்டார் . சு.வெங்கடேசன் எம்.பி., கூடுதல் ஆட்சியரிடம் முறை யிட்டு உடனடியாக வேலையை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடு களை செய்து கொடுத்தார். விதவைகள் ஓய்வூதியம் கேட்டு முறையிட்டவர்களிடம், முறையாக மனுக்கள் கொடுங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
பணிநேரம்: பெண் தொழிலாளர்கள் கோரிக்கை
கருப்பாயூரணி, சக்கிமங்கலம் ஆகிய பகுதிகளில் 100 நாள் வேலை பார்க்கும் பெண்கள் கூறுகையில், காலையில் 7 மணிக்கே வேலைக்கு வரச் சொல்கிறார்கள் .இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பு வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே அதை மாற்றி, 8 மணிக்கு வேலைக்கு வருவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும். அங் கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். அங்கன்வாடி மையத்திற்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முறையாக மனுக்கள் கொடுக்குமாறு கூறினார். 100 நாள் வேலையில் பணிக்கு உத்த ரவிடும் அதிகாரிகள் நேரத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்கு அதிகாரிகள் , தற்போது கோடை காலம் என்பதால் காலை யில் 7 மணிக்கு பணிக்கு வரச் சொல்கிறோம். 12 மணி வரை அவர்கள் பணி செய்துவிட்டு வீடு திரும்பச் சொல்கிறோம். 8 மணிக்கு வந்தால் ஒரு மணி வரை பணி செய்ய வேண்டும். வெயில் நேரம் என்பதால் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற் படும் என்பதாலேயே நேரம் தற் போது மாற்றப்பட்டுள்ளது. அடுத்து வரும் காலங்களில் நேரம் மாற் றப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து வீட்டுமனைப் பட்டா, ஓய்வூதியம் வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட் டது. ஓய்வூதியம் சரியாக வர வில்லை என்று சிலர் கூறினர். ஓய்வூ தியம் உடனடியாக கிடைக்க ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று அதி காரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத் தாய், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த. செல்லக்கண்ணு, கிழக்கு ஒன்றிய செயலாளர் கலைச் செல்வன், மாவட்டக்குழு உறுப்பி னர் மாயாண்டி மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மற்றும் கூடு தல் ஆட்சியர் சரவணன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் உமா மகேஸ் வரி, துணைத் தலைவர் வீரைய்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.