districts

கவிதை போட்டி

தூத்துக்குடி,டிச.20 தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கவிதை எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது. இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டா டத்தின் முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்  பல்கலைக்கழகத்தின் ஒர் அங்க மான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்தில் டிசம்பர் மாதத்திற்கு “என்  தேசத்தை நேசித்தல்” என்ற தலைப்பில் கவிதை எழுதுதல் போட்டி கல்லூரி மாணவ – மாண விகளிடையே நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி நகர கல்லூரி களில் பயிலும் மாணவ-மாணவி யர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இப்போட்டியில் காமராஜ் கல்லூரி தனுசியா, வ.உ.சி. கல்லூரி இவாஞ்சலின் மற்றும் போப்ஸ்  கல்லூரி அற்புதராஜ் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை கல்லூரி முதல்வர்  (பொ) ந.வ.சுஜாத்குமார் வழங்கி னார். வெற்றி பெற்ற மாணவர்களை  கல்லூரியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

;