இராமநாதபுரம், ஜூன் 26- இலங்கைக் கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்களை விடு விக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் குடும் பத்தினர் கண்ணீர் மல்க இராமநாதபுரம் ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளித்த னர். இராமநாதபுரம் மாவட் டம் மண்டபத்திலிருந்து கடந்த 21-ஆம் தேதி 300-க் கும் மேற்பட்ட விசைப்படகு களில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஜூன் 22-ஆம் தேதி அதிகாலை கச்சத்தீவுக் கும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்த மீனவர்கள் சந்தியா, அருளானந்தம், தேவா, ஜிப்ரன், நடராஜன், நாகசாமி ஆகிய ஐந்து பேரை படகுடன் கைது செய்து செய்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பானம் சிறையில் அடைத்தனர் . அவர்களது சிறைக்காவல் ஜூலை 5-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், மண்ட பம் மீனவர்கள் ஐந்து பேரை யும் படகையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்கக் கோரி கடல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே. கருணாமூர்த்தி தலைமை யில் மீனவர் குடும்பத்தினர் இராமநாதபுரம் ஆட்சியரி டம் மனு அளித்தனர். மனு வைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்மீனவர்கயும் பட கையும் விடுவிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்தார்.