சொத்து வரியை உயர்த்துவதற்கு ஆட்சேபணை தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகர் குழு சார்பில் நகர்மன்றத் தலைவர் பவித்ரா ஷ்யாமிடம் மனு வழங்கப்பட்டது. நகரச் செயலாளர் மாரியப்பன், நகர் குழு உறுப்பினர் செல்வராஜ், டாக்சி சங்க நிர்வாகிகள் கண்ணன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.