சிவகங்கை, மே 28- சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்தில் நூறு நாள்வேலைத் திட்டத்தில் ‘சர்வர்’ பிரச்சனையால் வேலை பார்த்தாலும் ‘ஆப்சென்ட்’ வருவதால் ஊதி யம் கிடைக்காமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். பணித்தள பொறுப்பாளர்கள் நூறு நாள் வேலை நடக்கும் இடத்தை ஜியோ டேக்கிங் முறையில் புகைப்படம் எடுத்து பதி வேற்றம் செய்ய வேண்டும். மேலும் பணிக்கு வந்தவர்களின் வருகை பதிவேட்டையும் காலை 11 மணிக்குள் ‘சாப்ட்வேரில்’ பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை தற் போது செயல்பாட்டிற்கு வந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் ‘சர்வர்’ பிரச்சனையால் வரு கைப்பதிவேடு முறையாக பதிவேற்றம் ஆவ தில்லை. இந்த குளறுபடியால் வேலைக்கு வந்த பலருக்கு ‘ஆப்சென்ட்’ என பதிவாகியுள் ளது. மேலும் ஜியோடேக்கிங் முறையில் எடுக்கப்படும் புகைப்படமும் சில சம யங்களில் பதிவேற்றம் ஆகாததால் ஊதி யம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. காளையார்கோவில் ஒன்றியத்தில் கண்டுப்பட்டி, கொல்லங்குடி, காள கண்மாய் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சர்வர் பிரச்சனையால் பலருக்கு ஊதியம் கிடைக்காதநிலை உள்ளது. இது குறிதது கிராமமக்கள் புகார் கொடுத்துள்ளனர். இப்பிரச்சனையை தீர்க்க மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணியம்மா, ஆட்சி யரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித் துள்ளார்.