districts

img

வாலிபர் சங்கம் சார்பில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு தினக் கூட்டம்

மதுரை ஏப் 4-  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டம் மேலக்குயில் குடி கிளை சார்பில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு தின வீர வணக்க கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கிளைத் செயலாளர் ராஜசேகர் தலைமை வகித்தார். தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கருத்துரையாற்றினார்.  இதில் மாவட்ட தலைவர் வி.கருப்ப சாமி, மாவட்டச் செயலாளர் பி.தமிழரசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன், மாவட்ட துணைச் செய லாளர் வி.ஹரி கிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கௌதம், சிபிஎம் கிளைச் செயலாளர் டி..ராஜா மற்றும் காந்தி, வைரமணி, சுந்தரபாண்டி, கிராம இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை தலைவர் டி.அருண் நன்றி கூறினார்.