districts

2,200 கி.மீ மாநில நெடுஞ்சாலை திட்டத்திற்கு அனுமதி

சென்னை, டிச. 1- அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்ட தலைமை யிடங்கள் மற்றும் தாலுகா தலைமை யிடங்களை இணைக்கும் விதமாக நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக 2,200 கிகி.மீ  மாநில நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் முதல மைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத் திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கப் ்பட்டுள்ளது. இதேபோன்று 6,700 கி.மீ  நீளமுள்ள சாலைகள், இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும் எனவும், விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட சாலைகளில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தால் அவைகள் உயர்மட்ட பால மாக மாற்றப்படும் எனவும் அரசாணை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;