தேனி, மே 29- மேகமலை வனப்பகுதியில் அரிக் கொம்பன் யானை நடமாட்டம் உள்ள தால் திராட்சைத் தோட்டங்களுக்கு தொழி லாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள தால் வீட்டில் முடங்கியுள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து பிடித்து வரப்பட்ட அரிக்கொம்பன் யானை கடந்த ஏப்.29-ஆம் தேதி தமிழக எல்லையில் விடப்பட்டது. விண்ணேற் றிப்பாறை, மேகமலையில் சுற்றித்திரிந்த இந்த யானை கடந்த 27-ஆம் தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது. மிரண்டு ஓடிய யானையால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டு யானையை வனப்பகுதிக்குள் துரத்தும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் ஞாயிறன்று மேக மலைக்குள் அரிக்கொம்பன் யானை இடம் பெயர்ந்தது. இதனால் மக்கள் நிம்மதி யடைந்தனர். இருப்பினும் திங்கட்கிழமை அதிகாலை மேகமலை அடிவாரத்திற்கு இறங்கிய அரிக்கொம்பன் யானை சண்முகாநதி அணை, நாராயணத்தேவன் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றது. இதனால் ராயப்பன்பட்டி, அணைப் பட்டி, காமயகவுண்டன்பட்டி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திராட்சைத் தோட்டங்களுக்குத் தொழிலாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்செல்வனுக்குச் சொந்தமான தென் னந்தோப்பில் புகுந்த அரிக் கொம்பன் தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
அரிக்கொம்பன் யானை மீண்டும் கிரா மத்திற்குள் வந்தால் அவற்றை பிடிப்பதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர் பிரகாஷ் தலைமையில் செல்வம், சந்திரசேகரன், கலைவாணன் உள்ளிட்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்து வதற்காக தயார் நிலையில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகை யில், யானைக்கு மயக்க ஊசி செலுத்தி னால் கிறுகிறுப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மயக்கமுற்று கீழே சாயும். ஆகவே தரைதளத்தில் யானை இருக்கும் போது மயக்க ஊசி செலுத்த முடியும். மயக்கமடைந்த அரிக் கொம்பனை வாகனங்களில் ஏற்ற கிரேன் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் கும்கி யானைகள் மூலம் அரிக் கொம் பனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனர். கம்பம், சுருளிப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரமும் அரிக் கொம்பன் யானை மீண்டும் வந்து விடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் மூன்றா வது நாளாக (திங்கட்கிழமை) 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் திராட்சைத் தோட்டங்கள், ஏலத் தோட்டங்க ளில் தினசரி கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள னர். அரிக்கொம்பன் இருக்கும் வனப்பகு திக்கு செல்ல செய்தியாளர்கள் உட்பட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது.