districts

img

மதுரை காமராசர் பல்கலை. தற்காலிக, தொகுப்பூதிய பணியாளர்கள் மீண்டும் பணி கோரி ஆட்சியரிடம் மனு

மதுரை, மே. 12- மதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி திடீரென்று பணி நீக்கம் செய்  யப்பட்டனர். இவர்கள்  வியாழனன்று சங்கத்தின் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் பணி வழங்கக்கோரி மனு அளித்தனர். இதுகுறித்து  அவர்கள் கூறுகை யில், தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டு 32 நாட்கள் ஆகின்றது. பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் பணி யில் சேர்ந்தோம் .ஆனால் தற்போது பணி நீக்கம் என்று அறிவித்துள்ளது பெரும் மன உளைச்சலை உண்டாக்கி யுள்ளது .தொடர்ந்து ஏழு ஆண்டுகள், பத்து ஆண்டுகள் என்று பலரும் பணி செய்துள்ள நிலையில் வேறு மாற்றுப் பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் திரு மணம் முடித்தவர்கள் .பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்று பலரும் உள்ளார்கள். எனவே மதுரை மாவட்ட ஆட்சியர் கல்லூரி நிர்வா கத்திற்கு பரிந்துரை செய்து மீண்டும் எங்களை பணியில் அமர்த்தி நிரந்த ரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி னர்.  மூட்டா மதுரை மண்டல செயலாளர் ஏ. டி. செந்தாமரைக்கண்ணன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க. நீதிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தமிழ், மாவட்ட இணைச் செயலாளர் பரமசிவம் மற்றும்  சங்கத்தின் மாவட்  டச் செயலாளர் அமிர்தா ,பொருளா ளர் செந்தில் ஆகியோர் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளித்தனர்.