திருநெல்வேலி, அக்.26- திருநெல்வேலி மாநகராட்சி 55 ஆவது வார்டு, சாய் பாலாஜி கார்டன் மற்றும் சர்வீஸ் ரோட்டில், சிட்டி திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 65 மின்சார தெரு விளக்குகளையும், குமரேசன் நகரில் புதிதாக கட்டப்பட்ட சேவை மையத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் திறந்து வைத்தார். இவ்விழாவில், நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜு, வழக்கறிஞர் தினேஷ், மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா, சி.பி.எம் 55 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியம், 39 ஆவது வார்டு பாலன், மாநகரப் பிரதிநிதி சாமுவேல், சி.பி.எம் தலைவர்கள் சுப்பிரமணியன், முருகன், சட்டையப்பன், செல்லப்பன், கார்த்திக், மாடசாமி, சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.