திருவில்லிபுத்தூர், பிப்.1- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் பசும்பொன் தெருவில் வசித்தவர் ராமர் (வயது 33). இவர் சிறு வயதிலேயே மனநிலை சரியில்லாமல் குறைபாடுடன் இருந்துள்ளார். தனது தாயா ருடன் மாடு மேய்க்கச் செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று ராமர் கோட்டையூருக்கு மேற்கே வயக்காட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ராமரின் உடலை மீட்ட னர். அவரது தம்பி மாரிமுத்து அளித்த புகா ரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.