தேனி, ஜன.23- பெரியகுளம் பேருந்து நிலையம் அருகே குடி யிருப்புகளுக்கு அருகே உள்ள திறக்கப்பட்டுள்ள தனி யார் மதுக்கடையை நிரந்தர மாக மூடவேண்டும் எனத் தேனி ஆட்சியரிடம் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர். பெரியகுளத்தில் நகரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாத நிலையில் ஏற்கனவே மூன்று தனியார் மதுக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது பொதுமக்கள், பெண் கள், குழந்தைகள் கூடும் இடத்தில் தனியார் மது பார் கள் அமைக்கப்பட்டுள்ளதை இடமாற்றம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கடந்த மூன்று மாதங்களாகப் போராடி வருகின்றன. இந்நிலையில் பெரிய குளம் பேருந்து நிலையம் அருகே கடும் எதிர்ப்புக்கிடை யில் தனியார் மது பார் ஞாயி றன்று திறக்கப்பட்டது. தன் னெழுச்சியாகத் திரண்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மதுக்கூடத்தை முற்றுகையிட்டனர். இதைய டுத்துக் கடை அடைக்கப் பட்டது. குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன், மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோரை தவ் ஹீத் ஜமாஅத் பொதுச்செய லாளர் முஹம்மது சித்திக், பெரியகுளம் வடகரை ஜமா அத் தலைவர் அப்பாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி. முருகன், விசிக தேனி மக்க ளவை தொகுதிச் செயலா ளர் இரா.தமிழ்வாணன், யாசர் அரபாத், முபாரக் அலி ஆகியோர் சந்தித்து வலி யுறுத்தினர்.