districts

img

அழகப்பா பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

சிவகங்கை, டிச.29-  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழக சமூகப் பணித்  துறை மற்றும் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி ஆகியன இணைந்து உலக மனித உரி மைகள் தினத்தை முன்னிட்டு “இந்தியாவில் மனித உரி மைகள்: பிரச்சனைகளும் -  எதிர்கொள்ளும் சவால்  களும்” எனும் தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்த ரங்கம் நடைபெற்றது.  பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு  துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி தலைமையேற்று உரை  யாற்றினார். அவர் தனது  உரையில், மனித உரிமை கள் என்பது மனித இனத்திற்  காக உறுதியளிக்கப்பட் டவை ஆகும்.  எவ்வித பாகு பாடுகளும் இல்லாமல் அனைவருக்கும் உரித்தான தும் ஆகும்.  மனித உரிமை கள் என்பது அனைவருக்கும் சமமாகவும், ஆரோக்கிய மானதாகவும் வழங்கப்பட வும் வேண்டும்.  இந்திய அர சியலமைப்பில் மனித உரி மைகள் தொடர்பான சரத்  துக்கள் அடிப்படை உரிமை களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் மனித உரிமைகள் உறுதி செய்யப் பட்டுள்ளது. பொது அமைதி,  

முன்னேற்றம் மற்றும் தேசத்  தின் வளர்ச்சி பாதுகாக்கப் பட வேண்டும் எனில் மனித உரிமைகளும் சட்டங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். கல்வியாளர் பிரின்ஸ்  கஜேந்திரபாபு நோக்கவுரை யாற்றினார்.  இந்நிகழ்வில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி ஜான் வசந்தகுமார், தேவகோட்டை ரோட்டரிச் சங்கத்தைச் சேர்ந்த முனை வர் கார்த்திகேயன், தொழில் அதிபர்கள் ரமேஷ்ராஜன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.  கருத்தரங்கில் மதுரையைச் சேர்ந்த மனித  உரிமை வழக்கறிஞர் செல்வ கோமதி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியன் மற்றும் அசாம் மாநிலத்தின் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ரத்னாஹஜ்ரி யம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  இத்தேசிய கருத்தரங் கில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்  தன் குழுவினரால் “தமிழ் ஓசை” என்ற தலைப்பில் இன்  னிசை கச்சேரி நடைபெற் றது.  அழகப்பா பல்கலைக் கழக பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.  முனைவர். மா.வேலுச்சாமி வரவேற்பு ரையாற்றினார். ஆனந்தா கல்லூரி துணை முதல்வர் க.கோபு நன்றி கூறினார்.