திண்டுக்கல், மே. 29- திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள திரு இருதய கல்லூரியின் 2022 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஜுலி கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். கல்லூரியின் முதல்வரும், செயலாளருமான முனைவர் எஸ். இன்னாசிமுத்து, கல்வி வளர்ச்சிக்குழு சார்பாக அருட்சகோதரர் டி.கஸ்பர்ராஜ். தமிழ்நாடு தலைமைச்செயலக சங்க தலைவர் முனைவர் பீட்டர்; அந்தோணிசாமி, கல்லூரி இல்ல அதிபர் முனைவர் ஞானபிரகாசம், விடுதி இயக்குநர் சகோதரர் பிரசாத், வளாக ஆலோசகர் சகோதரர் லூர்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)