தேனி, ஜன.27- புலிகள் காப்பக மலைப் பகுதிகளுக்குள் மலை மாடுகள் மேய்ப்பதற்கு வன உரிமை சட்டம் அனு மதி வழங்கிய படி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கம், கர்னல் ஜான் பென்னி குவிக் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையை நிறுத்தி வைக்க வேண்டும். தீர்ப் பைக் காட்டி மலைகளில் மலை மாடுகள் மேய்க்க விடா மல் வனத்துறை நோட்டீஸ் வழங்கியதை திரும்பப் பெற வேண்டும். காட்டுப் பன்றிகளை சுடுவதற்காக அரசாணையில் மலை மாடு கள் மேய்ச்சலை தடை செய்யும் விதிகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி. கண்ணன், கர்னல் ஜான் பென்னிகுவிக் மலை மாடு கள் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் சி.கென்னடி ஆகி யோர் தலைமை வகித்த னர். மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு, தமிழ்நாடு மேய்ச் சல் சமூக கூட்டமைப்பு தலை வர் சி.ராஜீவ் காந்தி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விவ சாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டத் தலைவர் எஸ்.கே. பாண்டியன், மாவட்ட நிர் வாகி இ.மூக்கையா, மலை மாடுகள் வளர்ப்போர் சங்க சங்க நிர்வாகிகள் டி.பழ னிச்சாமி, எம்.ஜெமினி, வழக்கறிஞர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்தி ரன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் டி.வெங்கடேசன், ஜி.எம்.நாகராஜன், கே.எஸ்.ஆறுமுகம், இ.தர்மர் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் போது வெயிலின் தாக்கம் கூடுத லாக இருந்ததை தொட ர்ந்து வளாகத்தில் மரத்தடி யில் போராட்டம் நடத்த அனு மதி கேட்டனர். காவல்துறை யினர் அனுமதி மறுக்கவே டெல்லிபாபு தலைமை யில் ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு அமர்ந்து முற் றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இடத்தை மாற்றி கொடுத்தனர்.