சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் அபிமன்யு . இந்த மாணவன், 1330 திருக்குறளை சொல்லிக்கொண்டே ரூபிக்ஸ் கியூபிக் சால்விங் விளையாட்டில் சாதனை படைத்து ஏழு பட்டங்களை வென்றுள்ளார். மாணவ ருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கூட்டுற வுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று மாண வர் அபிமன்யுவுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கி பாராட்டி, உற்சாகப்படுத்தினார். உலக அளவில் பெரும் சாதனை படைக்க வாழ்த்தினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூ தன்ரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி நாதன், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் ராஜேஸ்வரி ,சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் ,மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் , அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.