districts

மதுரை விரைவு செய்திகள்

கண்டமனூர் ஊராட்சியில் ரூ.1 கோடி ஊழல்  தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உறுப்பினர்கள் புகார்

தேனி, மே 31- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம்  கண்டமனூர் ஊராட்சியில் ரூ.1 கோடி வரை  பல்வேறு வகைகளில் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக தேனி ஆட்சியர் அலு வலகத்தில் வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கண்டமனூர் ஊராட்சி துணைத் தலைவர் சங்கிலியம்மாள், வார்டு உறுப்பி னர்கள் ராஜேஸ்வரி, தங்கம், குணசேகரன்,  அழகர்சாமி உள்ளிட்டோர் தேனி ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித்தனர். அதில், கண்டமனூர் ஊராட்சியில் பணி  மேற்கொள்ளாமல், போலியாக பில் தயா ரித்து,மிரட்டி தீர்மானங்களில் கையெ ழுத்து போட்டு ரூ.1 கோடி வரை மோசடி  செய்துள்ளார். இதுகுறித்து புகார் அளித் தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஊராட்சி தலைவர் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் குறிப்பிட்ட கவுன்சிலர்களை ஊராட்சி அலுவலகத்திற்கு நுழைய விடா மல், மக்கள் பணி செய்வதை தடுத்து வரு கிறார்கள். இந்த நிலை தொடருமானால் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழி யில்லை என அந்த மனுவில் தெரிவித்துள் ளனர்.

சிபிஎம் முற்றுகை போராட்டத்தால் நடவடிக்கை சட்டவிரோதமாக தனி நபர்களுக்கு வழங்கிய பட்டாக்கள் ரத்து

காரியாபட்டி, மே 31- காரியாபட்டி வட்டாட்சியர் அலுவல கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக, விதிமுறை களை பின்பற்றாமல் தனி நபர்களுக்கு வழங்  கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்  டத்திற்கு உட்பட்டது நந்திக்குண்டு உட் கடை, கீழத்துலுக்கன்குளம் கிராமத்தைச் சேந்த பொது மக்கள் நிலத்தை (146.30 ச.மீட்டர்) பொது மக்கள் பயன்படுத்தி வந்த னர். மேற்படி நிலத்தை, காரியாபட்டி வட் டாட்சியர் தனக்குமார்,தனி நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்கி உத்தரவிட்டார். இதனால், பொது மக்கள் அந்த இடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டாவை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், உரிய  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே,  வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, துணை காவல் கண்கா ணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர்  போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். முடிவில், உடனடி யாக தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்வதாக எழுத்துப் பூர்வமான உத்தரவு வழங்கப்பட்டது. இதை யடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக நடைபெற்ற போராட்டத் திற்கு வட்ட செயலாளர் ஏ.அம்மாசி தலை மையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முத்துக்குமார், ஒன்றியக்குழு உறுப்  பினர்கள் பி.மலைச்சாமி, சிவபாக்கியம், எம்.பரமசிவம், முகமது அலி ஜின்னா, கும ராண்டி, கிளைச் செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு

தேனி, மே 31- முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்  மே மாதத்தில் 130 அடிக்கு குறையாமல் இருந்ததால், ஜூன் முதல் தேதியில் பெரி யாறு அணையிலிருந்து முதல்போக விவ சாயத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்  நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை  ஏற்று முல்லைப்பெரியாறு அணையிலி ருந்து தேனி மாவட்ட முதல் போக பாச னத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்  வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து வெளியிடப்படுள்ள அர சாணையில், தேனி மாவட்டம், கம்பம் பள்  ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதி களில் முதல் போக சாகுபடிக்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கன அடி வீதமும் மொத்தம் வினாடிக்கு  300 கன அடி வீதம், 01.06.2022 முதல் 120 நாட்க ளுக்கு நீர் இருப்பைப் பொறுத்து, தேவைக்  கேற்ப, தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை யிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை அடுத்து புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேக்கடியில் தமிழக பொதுப்  பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீரை திறந்து வைக்கிறார்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

தேனி, மே 31- பெரியகுளத்தில் கம்பம் முக்கிய  சாலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் மனு அளித்துள்ளார் . கம்பம் முக்கிய சாலையில் தனியார் மருத்துவமனைகள் ,பெண்கள் கல்லூரி ,வழிபாட்டு  தலங்கள் உள்ள பகுதியில் மதுக்  கடை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள தாக தெரிகிறது .இந்த பகுதியில் மதுக்கடை திறந்தால் விபத்துகள் ,போக்குவரத்து தடை உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .எனவே மதுக்கடை அனு மதியை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

வேன் கவிழ்ந்து முதியவர் பலி

திருவில்லிபுத்தூர், மே 31-  வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் ஆசி தெரு வை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராபர்ட் (வயது 55 )இவ ரது 2ஆவது மகன் தமிழரசனுக்கு மதுரையில் பெண்ணை  நிச்சயம் செய்வதற்காக வேனில் சென்றனர். வேனை கான்சாபுரத்தை சேர்ந்த கிருபாகரன் என்பவர் ஓட்டி வந்தார். மதுரையில் நிச்சயம் விழா முடிந்த பின்பு மீண்டும் வேனில்  வத்திராயிருப்பு மெயின் ரோடு காடனேரி விலக்கு அருகே  வரும் போது வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கான்சாபுரம் கீழத்  தெருவை சேர்ந்தசில்வர் ஸ்டார் (வயது 50) என்பவர் படு காயமடைந்து உயிரிழந்தார். மேலும் 19 பேர் படுகாயம டைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் தலைமைக்காவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல், மே 31- திண்டுக்கல் அம்பாத்துரை காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரந்தவர் சுரேஷ். (வயது 48).  இவர் பாரதிய ஜனதா கட்சியின் தகவல்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பி வந்துள்ளார். இது  பற்றிய புகாரும் மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பா ளர் சீனிவாசனுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் காவலர்  சுரேஷின் ஃபேஸ்புக், பதிவுகளை ஆய்வு செய்ததை யடுத்து புகார் உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், தலைமைக் காவலர் சுரேஷை சஸ்பெண்ட் செய்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜூன் 8 இல் சிவகங்கை வருகை

சிவகங்கை, மே 31- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டைப்  பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்து வபுரத்தை திறந்து வைக்க ஜூன் 8 அன்று தமிழக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கைக்கு வருகிறார். கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்  முறையூர் ஊராட்சியில் நடைபெற்றது .இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி  வைத்துப் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வருகிற ஜூன் 8 அன்று 9:30 மணிக்கு பெரியார் நினைவு  சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். சிவகங்கை மாவட் டத்தில் கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் 346 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 22670 பேர் பயன் பெற்றுள்ளன்ர். நடப்பாண்டில் 36 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என்றார்.  இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் வர வேற்று பேசினார் . மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், குடும்ப நலத்துறை இயக்குனர் யோகேஸ்வரி, சுகாதாரத்துறை இயக்குனர் ராம் கணேஷ்,  பேரூராட்சி தலைவர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில்  5 பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்

விருதுநகர், மே 31- விருதுநகர் மாவட்டத்தில் பணி யாற்றும் 5 வட்டார வளர்ச்சி அலு வலர்களை இடமாறுதல் செய்து  மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி,காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவராக பணிபுரிந்த எஸ்.இராஜசேகரன், நரிக்குடி வட்டார  வளர்ச்சி அலுவலர்( கி.ஊ) ஆகவும்,  திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவல ராக பணிபுரிந்த ஜி.வாசுகி, சாத்தூர்  ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவராக வும்( கி.ஊ) இடமாறுதல் செய்யப் பட்டுள்ளனர். மருத்துவ விடுப்பில் உள்ள ஏ.பி.சத்தியசங்கர், வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணிபுரிந்த அ.சத்தியவதி, விருதுநகர் சிறுசேமிப்பு பிரிவு வட் டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் சிறுசேமிப்பு பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்த ஏ.பிரின்ஸ், நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக ( வ.ஊ) மாறு தல் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அலுவலர்கள் உடனடியாக பணிவிடுவிப்பு செய்து சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பணியேற்பு செய்து அந்த அறிக்  கையை உடனடியாக அலுவ லத்திற்கு அனுப்பி வைக்க வேண்  டும் என்றும் ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.

புகையிலை வைத்திருந்தவர் கைது

அருப்புக்கோட்டை, மே 31- அருப்புக்கோட்டை, சொக்கலிங்க புரம், எம்.டி.ஆர். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருச்சுழி சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவ லகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவதாக நகர் காவல் துறையின ருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சார்பு  ஆய்வாளர் தாமரைக்கண்ணன், தலைமை காவலர் அன்பழகன் ஆகி யோர் கடையை சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை விற்பனைக்கு வைத்திருந்ததையடுத்து, புகையிலைகளை பறிமுதல் செய்து போலீசார் ரமேசை கைது செய்தனர்.