100 நாள் வேலைத் திட்டத்தை ஆய்வு செய்த மாணிக்கம்தாகூர் எம்.பி
வெம்பக்கோட்டை, அக்.3- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள குண்டாயிருப்பு ஊராட்சியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப. மாணிக்கம்தாகூர் நேரில் ஆய்வு செய்தார். பின்பு, இ.டி.ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் ரெங்கசாமி, மாவட்டச் செய்தித் தொடர்பாளர் மீனாட்சிசுந்தரம், செல்வ கனி, கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்ததின பேச்சுப் போட்டி
விருதுநகர், அக்.3- தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்க பேச்சுப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த தினத்தையொட்டி வரும் அக் டோபர் 11-ஆம் தேதி காலை பள்ளி மாணவர்களுக்கும், மாலை கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டி, விருதுநகரில் உள்ள தங்கம்மாள், பெரியசாமி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதில், வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்த றிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என வும், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியா வின் சாக்ரடீஸ், தன்மானப் போராளி, பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி கள் நடைபெறுகின்றன. வெற்றி பெறுவோருக்கு முதல் பரி சாக ரூ.5ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.2ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வா கம் அறிவித்துள்ளது.
மதுரையில் அக்.12 முதல் அக்.22 வரை புத்தக்கண்காட்சி
மதுரை, அக்.3- மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி வருகின்ற அக்டோபர் மாதம் 12ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் இணைந்து அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி முதல் அக்டோபர் 22-ஆம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள “மதுரை மாநாட்டு மையத்தில்” புத்தகக் கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறுவர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறந்தவர்களை அடக்கம் செய்ய மாயனம் கேட்டு பிச்சை எடுத்த மக்கள்
சிவகங்கை, அக்.3- இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் அவதிப்படும் கீழாயூர் காலனி மக்கள். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கீழாயூர் காலனியில் பொது மயானம் உள்ளது. இதில் அனைத்து சமுதாய மக்களும் இறந்தவர்களை அடக்கம் செய்ய வழிவகை செய்து தர வேண்டுமென தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலு வலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள் ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் செவ்வாயன்று இந்த ஊரைச் சேர்ந்த சோனைக்காளை மகன் குமார் (43) வெளி யூரில் இறந்து விட்டார். அவரை சொந்த ஊரில் அடக்கம் செய்ய பெற்றோர்-உறவினர்கள் விரும்பினர். இதை யடுத்து அவரது உடல் கீழாயூர் கொண்டுவரப்பட்டது. மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியில் அவரது உடல் இளையான்குடி மயானத்தில் அடக்கம் செய் யப்பட்டது. அக்.3-ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த தண்ணிமலை யின் மனைவி செல்வி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அவரது உடலை சொந்த கிராமத்தில் அடக்கம் செய்ய எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்க மயானத்தை கூட பிச்சைகேட்கும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.
சாலை விபத்தில் ஒருவர் பலி
கடமலைக்குண்டு,ஆக.3- தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (45). விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மனைவியுடன் ஆண்டிபட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். சுப்புலாபுரம் விலக்கை கடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் செல்வம் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். கண்டமனூர் காவல்துறையினர் விசா ரிக்கின்றனர்.
கார் மோதி ஒருவர் படுகாயம்
பழனி, அக்.3- பழனி அருகே பழைய ஆயக்குடி குரும்பர் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் இரு சக்கர வாகனத்தில் ஆயக்குடி சாலையில் சென்று கொண்டி ருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாய மடைந்து பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆயக்குடி காவல் துறையினர் விசாரித்த னர்.