மதுரை, அக்.30- மாணவர்கள் தேர்வு முறை கேட்டில் ஈடுபடுவதை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். அரசுத் தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடு செய்வதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. ஏப்ரல் 5-ல் விடைத்தாள் திருத்தும்போது, மதுரை மையத்தில் தேர்வு எழு திய மாணவர்களின் இரு விடைத் தாள்கள் ஒரே மாதிரியாக இருந் துள்ளன. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். இதில், குறிப்பிட்ட இரு மாணவர்களும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். விசாரணையில் மதுரை பழங்காநத்தம் அருகே யுள்ள ஒரு பள்ளியில் படித்த அடுத்த டுத்த பதிவெண் கொண்ட இரு மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றதும் தெரியவந்தது. இதனால் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும். இதற்காக ஒரு மாணவர் எழுதிய தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் 5 ஆண்டு களுக்கு தேர்வு எழுத ஏன் தடை விதிக்கக் கூடாது எனவும் கூறி அரசு தேர்வுகள் இணை இயக்குநர்/மேல்நிலைப்பள்ளி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வும், மதிப்பெண் பட்டியல் உள் ளிட்ட சான்றிதழ்களை வழங்கக் கோரியும் ஒரு மாணவரின் தந்தை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர், ‘‘நீதிமன்ற உத்த ரவுப்படி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது வரை புகார் வரவும் இல்லை. காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யவில்லை.
இருப்பினும் மாணவனின் மொபைல் போன் பறிமுதல் செய் யப்பட்டு குறுந்தகவல், தொலை பேசி அழைப்புகள் ஆய்வு செய் யப்பட்டுள்ளன. தேர்வில் முறை கேடு நடந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை மதுரை குற்றப் பிரிவு காவல்துறைக்கு மாற்ற லாம்’’ என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘எதிர்கால வாழ்க்கையை வளமாக்கும் அர சுத் தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு தேர்வுகளில் முறைகேடுகள் சமு தாயத்தை பாதிக்கக்கூடிய ஒன்று. மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். மாணவர் தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டாரா? இல்லையா? என் பது குறித்து அரசு தேர்வுகள் இயக் கக இணை இயக்குநர் விசாரணை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறைகேடு புகார் குறித்து அரசுத் தேர்வு இணை இயக்குநர் உடனடியாக மதுரை மாநகர குற் றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும், புகார் மீது உட னடியாக வழக்குப்பதிவு செய்து, அதனை சிபிசிஐடி காவல்துறை கூடுதல் இயக்குநருக்கு சமர்ப் பத்து விசாரணை நடைபெற வேண்டும். மேலும் விசாரணை அறிக்கையை 6 மாதத்தில் சமர்ப் பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.