மதுரை, ஏப்.20- மதுரை மாநகராட்சி 22-ஆவது வார்டு தத்தனேரி கணேசபுரம், கைலாசபுரம் மின் மயானம் மற்றும் மயான விரிவாக்க பகு திகளில் அடிப்படை மேம்பாடு கள் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் புதனன்று மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாக ராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கைலாசபுரம் மின் மயானம் இரண்டாவது யூனிட்டி ற்கு செல்லும் பாதை பொது மக்கள் பயன்படுத்தும் தெரு சாலை பகுதியில் உள்ளது. எனவே அதை மாற்றியமைக்க வேண்டும், மேலும் அருகில் உள்ள கணேசபுரம் பகுதியில் சாலைகள் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், கைலாசபுரம் மயானத்தில் உள்பகுதியில் எதிரே விரிவாக்கப் பகுதியில் உள்ள கருவேல மரங்க ளை அகற்றி அங்கு பூங்கா அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு அதற்கான ஆலோ சனைகளை அப்பகுதி செயற் பொறியாளரிடம் கூறினார். இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், பகு திக்குழு செயலாளர் வி.கோட் டைச்சாமி, பகுதிக் குழு உறுப்பி னர் பாலசுப்பிரமணியம் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.