districts

மதுரை மாநாட்டு மையத்தில் செப்.23 முதல் புத்தகக் கண்காட்சி துவக்கம் குழந்தைகளுக்காக கதை சொல்லல் அரங்கம்

மதுரை, செப்.12- மதுரை தமுக்கம் மைதானத்தில்  உள்ள  “மதுரை மாநாட்டு மையத்தில்”  மாபெரும்  புத்தக கண்காட்சி வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி  முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். கூடல் மாமதுரையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய புத்தக  பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக வருடந்  தோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள்  இயக்கமாக எடுத்துச்செல்ல உத்தரவிட்ட தன் பேரில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள  ”மதுரை மாநாட்டு மையத்தில்” மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.  இதில்  புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் சார்பாக  200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது.   இப்புத்தகக் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வு களைக் கொண்ட சிறார் அரங்கமும், கல்  லூரி மாணவ, மாணவியர் மற்றும் விருப்ப முள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாட கம், சினிமா, தொல்லியல் மற்றும் நுண் கலை தொடர்பான பயிலரங்கங்கள் சிறந்த வல்லுநர்களைக்கொண்டு நடத்தப்படவுள் ளது.  தினந்தோறும் மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பேச்சா ளர்களின் உரை வீச்சுகள் மற்றும் பட்டி மன்றங்கள் நடைபெற உள்ளன.  எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்க மாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்  காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவி யர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

;