மதுரை, பிப்.20- மதுரை மத்திய சிறை நிர்வாகத்திற்கு கீழ் சிவ கங்கை மாவட்டம் காளை யார்கோவில் புரசடை உடைப்பு பகுதியில் திறந்த வெளி சிறைச்சாலை செயல் பட்டு வருகிறது. இங்கு சுமார் 84 ஏக்கரில் 100க்கும் மேற்பட்ட கைதி கள் மூலம் நெடுங்கால பயிர் களான கொய்யா, மாதுளை, எலுமிச்சை, வாழை, தென்னை, பனை விவசாயமும், குறுங் கால பயிர்களாகிய காய்கறி கள், பழவகைகள், கீரை வகைகளும் பயிரிடப்படு கின்றன. திறந்தவெளி சிறைச் சாலையில் பயிரிடப்பட்ட சுமார் 2 டன் தர்ப்பூசணி பழங் கள் மதுரை மத்திய சிறைச் சாலை வாயிலில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கோடை காலம் நெருங் கிக் கொண்டிருப்பதால் தர்ப்பூசணி பழத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் சந்தை மதிப்பை விட 20 முதல் 30 சதவீதம் குறை வான விலைக்கு இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட தர்ப்பூசணி பழங்கள் சிறை நிர்வாகம் மூலம் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று மதுரை மத்திய சிறை அங்காடியில் இயற்கை முறையில் உரு வாக்கப்பட்ட பஞ்சகாவி யம், அமிர்த கரைசல் போன்ற திரவ வடிவிலான இயற்கை உரங்களும் விற்பனை செய்யப்பட வுள்ளதாகவும் கொய்யா, மா, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களும் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளதாகவும் சிறைத் துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை மூல மாக கிடைக்கும் தொகை யில் 20 சதவீதம் விவசாய பணிகளில் ஈடுபடும் சிறை வாசிகளுக்கு ஊதியமாக அவர்களது வங்கிக் கணக் கில் செலுத்தப்படும்.