தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் பெண் சடலம்
தூத்துக்குடி,பிப். 8 தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு, ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அந்த வீட்டிற்குள் சேரில் அமர்ந்த நிலையில் பெண் இறந்து கிடந்தார். அவரது சடலம் அழுகிய நிலையில் இருந்தது. விசாரணையில் அந்த பெண் குருசாமி மனைவி ஜெயநாத ஜோதி (41) எனத் தெரியவந்தது. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 29ம் தேதி ஜெயநாத ஜோதியை அவரது தங்கை பார்க்க வந்துள்ளார். அதன் பின்னர் வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இறந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என்பது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி கேமரா வைப்பதில் தாக்குதல்; தந்தை மகன் உள்பட நால்வர் மீது வழக்கு
களியக்காவிளை, பிப். 8- பளுகல் அருகே மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் பிரைசல்ஸ். இவர் தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளார். இந்த கேமரா பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரைட் என்பவரின் படுக்கை அறையை நோக்கி இருந்ததாகக் கூறி அந்த கேமராவை அங்கிருந்து அப்புறப் படுத்த பிரைட் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி பிரைசல்ஸ் அவரது மகன்கள் ஸ்டாலின் ரெத்தினா, லெலின் ரெத்தினா, லிக்மோன் ரெத்தினா ஆகியோர் பிரைட் வீட்டில் சென்று தகராறில் ஈடுபட்டதுடன் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர் பாக பளுகல் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் பேரில் தந்தை, மகன்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
தேனி, பிப்.8- தேனி மாவட்டம், சின்னமனூர் நக ராட்சி 25 ஆவது வார்டைச் சேர்ந்த திமுக வேட்பாளர் ஆர்.அய்யம்மாள் அதிமுக சார்பில் இளையராஜா, சுயேட்சையாக நிஷார் பேகம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இளையராஜா, நிஷார்பேகம் தங்களது வேட்புமனுக்க ளை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இத னால் திமுக வேட்பாளர் ஆர்.அய்யங்ம் மாள் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
நத்தம் : 77 பேர் போட்டி
நத்தம், பிப்.8- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூ ராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு திமுக, அதிமுக கட்சிகள் உள்பட 125 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனையில் 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 104 மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் சுயேட்சைகள் உள்பட 27 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்ற னர். இறுதியாக 18 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூ னிஸ்ட், நாம் தமிழர், அமமுக, கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் அதிகபட்ச மாக 6 வது வார்டு பகுதியில் 7 பேர் போட்டியிடுகின்றனர்.
சிபிஎம் மூத்த தோழர் முத்துசாமி காலமானார்
மதுரை, பிப்.8- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முருகன்பட்டியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் முத்துச்சாமி (95) காலமானார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் தாலுகாக் குழு உறுப்பினர்கள் வி.அடக்கிவீரணன், சி.எஸ்.மணி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் கரு.கதிரேசன் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தோழர் முத்துசாமியின் மீது சிவப்புக் கொடி போர்த்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
குமரி மாவட்ட தேர்தல் களத்தில் 4,366 வேட்பாளர்கள் கண்காணிப்புக்கு 75 பறக்கும் படைகள் அமைப்பு
நாகர்கோவில் பிப். 8- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி குளச்சல், குழித் துறை, பத்பநாபபுரம். கொல்லங் கோடு நகராட்சி. மற்றும் 51 பேரூ ராட்சிகளுக்கு தேர்தல் நடக்கி றது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பா ளர் இறுதி பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள பதவிகளுக்கான தேர்த லில் 4 ஆயிரத்து 366 பேர் களத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலை கண்காணிக்க 75 பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழு வதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். தேர்தல் முடிவடைந்த பிறகு வாக்குகளை எண்ணு வதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சிக் கான வாக்குகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியிலும் பேரூ ராட்சி மற்றும் நகராட்சி வாக்கு கள் அந்தந்த பகுதிகளிலும் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட் ்டத்தில் 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஏற்கன வே பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சிக்கான மின்னணு எந்தி ரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள் ளன. அவை சம்பந்தப்பட்ட பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலு வலகத்திற்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்
அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
தூத்துக்குடி,பிப். 8 தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் தி.மு.க கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களை ஆதரித்து “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி” என தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் 09.02.2022 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்திட இருக்கிறார். இதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கி றேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
நெல்லை தச்சநல்லூரில் மூதாட்டி தற்கொலை
திருநெல்வேலி, பிப் .8- நெல்லை தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆப்ரேசனுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கஸ்தூரி (73).இவருக்கு வயிற்றில் கட்டி ஏற்பட்டு வலி ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்தார். மாத்திரை- மருந்துகள் சாப்பிட்டும் குணமாக வில்லை. இதனால் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்த னர். இதில் பயந்த கஸ்தூரி ஆப்ரேஷன் வேண்டாம் என்று கூறி வீட்டில் இருந்து வந்தார்.இந்த நிலையில் அவரது மகன் மற்றும் உறவினர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த கஸ்தூரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மகன் ரங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில், தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.82 ஆயிரம் பறிமுதல்
திருநெல்வேலி, பிப். 8- நெல்லை அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.82 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் செவ்வாயன்று காலை அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி நெல்லை மாவட்டத்தில் வாக்கா ளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் படுகிறதா என்பதை கண்காணிப்பதற் கும், தடுக்கவும் பறக்கும் படைகள் நிய மிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 51 பறக்கும் படை குழுக்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கட்கிழமை நள்ளிரவு பறக்கும் படை அதிகாரி மணி வண்ணன் தலைமை யில் போலீஸ்காரர்கள் பால சுப்பிரமணி யன், பார்த்த சாரதி, சண்முககனி, கணபதி ஆகியோர் தலைமையிலான பறக்கும் படை நெல்லையை அடுத்த பிராஞ்சேரி பகுதியில் வாகன சோதனை மேற் கொண்டது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.82 ஆயிரம் பணம் இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.அதில் நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த சதீஷ் (வயது36) என்பதும், அவர் சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கானங்குளத்திற்கு சென்றதும் தெரியவந்தது.சதீஷ் சலூன் கடை வைத்துள்ளார். மேலும் சீட்டு பிரித்து நடத்துகிறார். அதற்கான தொகையை அவர் வசூல் செய்து கொண்டு செல்வ தாக தெரிவித்தார். ஆனாலும் அதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கோபால சமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.
சிலிண்டருக்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டாம்
தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி,பிப். 8 தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.964 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.962.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.971 ஆகவும், கயத்தாரில் ரூ.974 ஆகவும், எட்டையபுரத்தில் ரூ.962.50 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.981 எனவும், பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.964 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.964 எனவும், 01.02.2022 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2Kg) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் 396 வார்டு பதவிகளுக்கு 1950 பேர் போட்டி!
தூத்துக்குடி,பிப். 8 தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 396 வார்டு உறுப்பினர் பதவிக ளுக்கு 1950 பேர் போட்டியிடு கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சி கள் மற்றும் 18 பேரூராட்சிகளில் உள்ள 414 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு வரு கிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி துவங்கி கடந்த 4ம் தேதி வரை நடந்தது. 414 பதவிகளுக்கு மொத்தம் 2,276 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு 480 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 32 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 5 மனுக்கள் தள்ளு படி செய்யப்பட்டது. தற்போது 443பேர் களத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 81 உறுப்பினர் பதவிகளுக்கு 542 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. 67 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது 462 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 261 டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு 1221 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த னர். அதில் 24 மனு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 146 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 6பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது 255 வார்டு உறுப்பினர் பதவிகளு க்கு 1045 பேர் களத்தில் உள்ள னர். மாவட்டத்தில் மொத்தம் 396 பதவிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 1950 வேட்பா ளர்கள் போட்டியிடுவதாக அதி காரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே கடம் பூர் முதல்நிலை பேரூராட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள் ளது. தேர்தல் தேதி பின்னர் அறி விக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.