திருவில்லிபுத்தூர், மே 27- திருவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிர்த்தான் பகுதியில் தேசிய நெடுஞ் சாலை பணிக்காக அமைக்கப்பட்டுள்ள கல் குவாரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக கல் குவாரி அமைக் கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். கல் குவாரி யில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற் படும் என நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 27 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்ன துரை ஆய்வு, பொதுமக்கள், விவசாயிகளி டம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள தால் கல் குவாரியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஜய முருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூ னன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட் டக்குழு உறுப்பினர் திருமலை உள்ளிட் டோர் உடனிருந்தனர்.