districts

img

மத வெறியை மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்கம் காப்போம்

மத வெறியை மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்கம் காப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பிஎஸ்என்எல், எல்ஐசி, ரயில்வே விமானம் மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க அனுமதியோம் என முழக்கமிட்டும் இராஜபாளையத்தில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா மாவட்ட உதவித் தலைவர் ஜி.கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் மாரியப்பன், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் செல்லச்சாமி, சாராள், ராமர், திருமலை, ராமர் (கைத்தறி), சோமசுந்தரம், பாலசுப்பிரமணியன்,  அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் முத்து வெள்ளையப்பன், கருமலையான், ராஜகுமார்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;