districts

img

“லெனின் தேர்வு நூல்கள்” வெளியீட்டு விழா தமிழக இடதுசாரி இளைஞர்களுக்கு அறிவூட்டிய என்சிபிஎச் மதுக்கூர் ராமலிங்கம் பாராட்டு

மதுரை, டிச.18-  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் “மாமேதை லெனின் தேர்வு  நூல்கள்” வெளியீட்டு விழா மதுரை  கே.கே.நகரில் உள்ள வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், “நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் உண்மையிலேயே பாடப் புத்தகங்களைத் தாண்டி, நான் தொட்ட முதல் நூல் வழங்கிய நிறு வனம். தமிழ்நாட்டில் உள்ள இடது சாரி இளைஞர்களுக்கு அறிவூட்டும்  முக்கிய பங்களிப்பை இந்நிறுவனம் செய்துள்ளது.

மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நடமாடும் புத்தக விற்பனை மூலம் நியூ செஞ்சுரி புத்த கங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக கம்யூ னிஸ்ட்களிடம் மற்றவர்கள் பேசத் தயங்குவார்கள். ஏனெனில் நாம் உலகைப் புரிந்து கொண்டவர்கள் என்று  எதிரிகள் நம்புகிறார்கள்” என்றார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உரை யாற்றுகையில், “இது அரசியல் பேசும் நிகழ்ச்சி அல்ல. முன்னாள்  தலைமைச் செயலர் இறையன்பு நல்ல  மனிதர், நேர்மையாக பணியாற்றி யவர் என்பதால் அழைக்கப்பட்டு உள்ளார். பத்தாண்டுகளுக்கு முன் மது ரையின் அடையாளமான யானை மலையை பாதுகாத்தவர் இவர். நியூ  செஞ்சுரி புத்தக நிறுவனம் தொழிலா ளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அம்பேத்கர் தேர்வு நூல்கள் 37 தொகுதிகளை முதன்முதலில் வெளியிட்டது. தற்போது தமிழக அரசு தேர்வு செய்துள்ள அம்பேத்கர் தேர்வு நூல்கள் 20 தொகுதிகளை வெளியிடும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. மக்களிடையே விழிப்பு ணர்வு வேண்டும். விழிப்புணர்வு வாசிப்பதன் மூலமே ஏற்படும். லெனின் தேர்வு நூல்களை அனைவரும்  வாசிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி னார்.

முன்னாள் தலைமைச் செயலர்  வெ.இறையன்பு சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலை வர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குநர் க.சந்தானம் வரவேற்புரை ஆற்றினார். முதுநிலை விற்பனை சீர மைப்பாளர் அ.கிருஷ்ணமூர்த்தி நன்றி யுரை வழங்கினார்.