இராஜாக்கமங்கலம், ஜுலை 3- இராஜாங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஆவது வார்டுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஆர்.லதா போட்டியிடுகிறார். இவ ருக்கு ஆதரவாக சிபிஎம் மற்றும் கூட் டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேக ரித்தனர். ஞாயிறன்று (ஜுலை 3) புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற வாக்கு சேகரிப்பில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், மூத்த தலைவர்கள் என்.முருகேசன், கே. மாதவன், திமுக ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், காங்கிரஸ் வட்டார தலை வர் அசோக்ராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ். கண்ணன், ஒன்றிய செயலாளர் எஸ்.டி. ராஜகுமார், பாலமுருகன், சிவகோபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாஜகவின் ஒன்றிய கவுன்சிலர் மறைவையொட்டி இங்கு இடைத்தேர் தல் நடைபெறுகிறது.