districts

img

பன்முகத்தன்மை கொண்டவர் பூ இராமு

சென்னை, ஜூன் 28- திரைப்பட கலைஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகியு மான பூ இராமு மறைவுக்கு இரங்கல்  தெரிவித்து ஊரப்பாக்கம் மயானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலை வர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட, நாடகத்துறை கலைஞர்கள் அவரது பன்முகத்தன்மையைக் குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் பேசுகையில், வாலிபர் சங்  கம், தமுஎகச, மார்க்சிஸ்ட் கட்சி ஆகி யவற்றைச் சென்னை பகுதியில் உரு வாக்குவதற்குப் பல போராட்டங்களை யும் முயற்சிகளையும் செய்தவர் தோழர் இராமு. தோழர்களின் குடும்பங்க ளுக்கு உதவிகளைச் செய்தவர். கட்சி யின் மாநில செயற்குழு சார்பில் அவ ருக்கு அஞ்சலியைச் செலுத்துகின் றோம் என்றார்.

கே.சாமுவேல்ராஜ்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகை யில், வாழ்க்கையில் வெற்றி பெற்று  வாழ்பவர்களை அதிகம் காணமுடி யும், ஆனால் உண்மையாக வாழ்ந்தவர்  களைக் காண்பது கடினம். அப்படி உண்மையாக வாழ்ந்தவர் தோழர் ராமு.  வாழ்க்கையால் நாம் பல நேரங்களில் தனிமைப்பட்டு வருகிறோம் என்ப தைத் தோழர் இராமுவின் மரணம் நமக்குச் சுட்டிக்காட்டியுள்ளது. தோழர் ராமுவின் மரணத்திற்கு வந்திருக்கும் பலரும் அவரோடு இணைந்து பல்வேறு நேரங்களில் பயணித்தவர்கள். தோழர் கருப்பு கருணா, எம்.என் எஸ்.வெங்கட்டராமன் ஆகியோரின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தற்போது ராமுவின் மர ணம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள் ளது. இளைஞர்களை ஈர்த்த தோழரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி யது அதிகமாக உள்ளது என்றார்.

பிரளயன்

நாடக இயக்குநர் பிரளயன் பேசுகை யில், சென்னையில் 1990 முல் 2005 ஆம்  ஆண்டு வரை நாடக குழுக்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த வர் தோழர் இராமு. பன்முகத் தன்மை  கொண்டவர். ஒன்றுபட்ட சென்னை மாவட்டத்தில் 10 நாடகக் குழுக்களை உருவாக்கிய போது அதில் வீதி நாடகக் கலைஞர்கள் மேடையில் நடிக்க முடி யுமா? என்று சவால் வந்த போது மேடை யில் கலைத்திறனுடன் சவாலை வென்று காட்டியவர். தனது பன்முகத் தன்மையைக் வெளிப்படுத்தியவர் தோழர் இராமு என்று கூறினார்.

இரா.தெ.முத்து

1996ம் வருடம் மாநில மாநாட்டுப் பணியின் போது ஆட்டோ இராமுவாக அறிமுகமானவர், பண்பாட்டு குணாம் சத்தை நிலைநாட்டியவர், கருத்துக் களை முன்வைத்து விவாதிப்பதில் கை தேர்ந்தவர், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம், திருநங்கைகள் நல வாரி யம் அமையக் காரணமாக இருந்தவர்.  இயல்பான நடிப்பால் திரை உலகில் ஜொலித்தவர். அவரது இழப்பு தமுஎகச விற்கு பெரும் இழப்பு என்று தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்  கள் சங்கத்தின் மாநில துணைத்தலை வர் இரா.தெ.முத்து கூறினார். தோழர் சைதை ஜெ தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சைதை மணிகண்டன், சைதை முரளி பத்திரிக்கையாளர் கோவிந்தன், சிந்தன் புக்ஸ் பதிப்பாளர் க. மாதவ், திரைப்பட இயக்குனர்கள் சசி, ஷாகுல், லெனின் பாரதி, தவில் விநாயகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் செல்வா, ஹோமியோபதி மருத்துவர் பாலமுரு கன், தமுஎகச தென்சென்னை மாவட்ட நிர்வாகி அசோக்சிங், திருவண்ணா மலை தமுஎகச நிர்வாகி பாலாஜி, குறும்  பட இயக்குநர் தாஸ், சிபிஎம் கொளத்  தூர் பகுதி செயலாளர் ஹேமா, மார்க்  சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மணிவேல் உள்பட பலர் பேசினர்.