திண்டுக்கல், ஏப்.26- உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழி யாக்கிட வலியுறுத்தி திங்களன்று திண்டுக்கல்லில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச்செய லாளர் கென்னடி, வழக்கறிஞர் ஆனந்த முனிராஜ், பெருமாள் ஆகியோர் பேசினர். ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைச்செயலாளர் வழக்கறிஞர் பெருமாள் தலைமை வகித்தார்.