நாகர்கோவில் ஜன. 12 கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு. இளைஞர் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் வட்டாரம் பறக்கையில் இந்திய மாணவர் சங்க நிர்வாகி தீரஜூக்கு கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் வட்டாரம் பறக்கையில் இந்திய மாணவர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்துரு தலைமை வகித்தார். மேலும் மாவட்ட குழு உறுப்பினர் முஃபீஸ், வட்டார செயலாளர் முத்து சிவம், துணை தலைவர் சூரியா, துணை செயலாளர் சித்ரா மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.